( க்ளித்தெம்நேஸ்த்ராவின் நண்பர்
அனுப்பிய தூதர் எனத் தம்மை அறிமுகப்படுத்திக்கொண்ட ஒருவர்,
தேர்ப் பந்தய விபத்தில் ஒரேஸ்த்தஸ்
மாண்டுவிட்டதாய்த் தெரிவித்தார்.)
க்ளித்தெம்நேஸ்த்ரா --
அன்றுமுதல்
அவனென் முகத்தைப் பார்த்தறியான் என்றாலும்
தந்தையின் சாவுக்கு என்மீது பழிசுமத்தி
சூளுரைத் திருந்தான் என்னைத் தண்டிக்க.
இங்கே யதனால் இரவும் பகலும்
கிடந்தேன் உறங்காமல் காலத்தின் கைதியாய்
மெல்ல நெருங்கும் இறப்பை எதிர்நோக்கி.
விடுதலை என்றனுக்கு இப்போது; விடுதலை
அவனைப் பற்றிய அச்சத்தில் இருந்து.
என்னமைதியை அதிகமாய்க் கெடுக்கின் றவள்,
என்னித யத்தின் செம்மதுவை உறிஞ்சும்
பாம்பாம் இவளிடம் இருந்து மேதான்.
இவளது மிரட்டலுக் கிடமின்றிப் போயிற்று.
இனிநான் வாழலாம் அமைதியாய்.
எலெக்த்ரா - நீதி யாகுமா இது?
க்ளித்தெம்நேஸ்த்ரா - நீதி, வழங்கி யாயிற்று அவனுக்கு.
இன்னம் இல்லை உனக்கு.
எலெக்த்ரா - பழிக்கான தேவதையே! கேள்.
பேசு மடிந்தவனுக்காக.
க்ளித்தெம்நேஸ்த்ரா -- அதுமிக விஸ்வாசமாய்க்
கேட்டுவிட்டது;
நன்றாயும்
பேசிவிட்டது.
No comments:
Post a Comment