Monday 5 October 2015

புதுமை படைக்கும் புதுகைக்கு புதுவையிலிருந்து...


பற்பல போட்டிகளுடனும் புதுமைகளுடனும் 
 நான்காம் ஆண்டு பதிவர் சந்திப்புத் திருவிழாவை 
சிறப்புற நடத்த உள்ள  
புதுகை விழாக்குழுவினருக்கு வாழ்த்து.

விழாவுக்கான அழைப்பிதழ் கீழே... 








உலகறிந்த தமிழ் எழுத்தாளர்இன்றும் சலிக்காமல் லட்சக்கணக்கான வாசகர் திரளோடு அடிக்கடி வலைப்பக்கத்திலும் எழுதி வருகிற எழுத்தாளர் எஸ்.ராஅவர்கள் வருகிறார்கள்!

உலகம் முழுவதும் தேடுபொறியில் கோடிக்கணக்கானோர் தினமும் தேடும் கட்டற்ற தகவல் களஞ்சியமான “விக்கிமீடியாவின் இந்தியத் திட்ட இயக்குநர் திருமிகு .இரவிசங்கர் அவர்கள் வருகிறார்கள்...(இவர்களின் சொந்த ஊர் புதுக்கோட்டை என்பதும் குறிப்பிடத் தக்கது)

புதுக்கோட்டையில் பயின்றுபலகாலம் பணியாற்றிதற்போது காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத் துணைவேந்தர் பொறுப்புக்குப் பெருமை சேர்த்து வரும் முனைவர் சொ.சுப்பையா அவர்கள் வருகிறார்கள்...

முதன்முறையாகதமிழ்ப் பதிவர்களோடு இணைந்துரூ.50,000 ரொக்கப் பரிசும் அறிவித்து மகிழ்வித்திருக்கும் தமிழ்இணையக் கல்விக கழகத்தின் இணைஇயக்குநர் முனைவர் மா.தமிழ்ப்பரிதி அவர்கள் வருகிறார்கள்...

எங்களையெல்லாம் “வலையில் வீழ்த்திதமிழ் இணையப் பயிற்சிக்கும் தூண்டிகல்வி-இலக்கியம்-தொழில்நுட்பம்-தலைமைப் பண்பு-மனிதப்பண்பு எனப் பலப்பல துறைகளில் எங்களுக்குத் தன் செயல்களால் பயிற்சி தந்தவர்தற்போது கோவை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலராகப் பணிமாறுதல் பெற்றுச் சென்றாலும்இதயத்தால் எங்களுடனே எப்போதும் இருக்கும் எங்களய்யா முனைவர் நா.அருள்முருகன் அவர்கள் வருகிறார்கள்...

இவர்களொடு... தொடர்பு நமக்குக் கிடைக்கக் காரணமான இளைஞர்கணினித்துறையில் ஆற்றலும் அனுபவமும் தொடர்ஆர்வமும் கொண்ட நம் நண்பர் நீச்சல்காரன் அவர்கள் வருகிறார்கள்..

காலை 8.30 மணிக்கு – கவிதை-ஓவியக் காட்சி திறப்புடன் தொடங்கிமாலையில் இன்ப அதிர்ச்சியாக வரப்போகும் சில முக்கியமான நண்பர்களின் வரவு வரை தொடர் நிகழ்ச்சிகள்...5மணிக்கு விழா நிறைவடையும்.

பதிவர் அறிமுகம்- தமிழிசைப்பாடல்கள்- புத்தக வெளியீடுகள்- பதிவர் நூல் காட்சி மற்றும் விற்பனை- சிறப்புரைகள்- போட்டிகளில் வெற்றி பெற்ற பதிவர்களுக்கு ரொக்கப்பரிசும் சான்றுகளும் வழங்கல்- தமிழ் வலைப்பதிவர் கையேடு வெளியீடு-என நிகழ்ச்சிகள் 5மணிவரை தொய்வின்றித் தொடரும்..!

இதில் அனைத்து மாவட்டங்களிலிருந்தும்வெளிமாநிலங்களிலிருந்தும் சுமார் 350பேர் வருவார்கள் என்னும் எதிர்பார்ப்பில் ஏற்பாடுகள் நடந்து வருகின்றனஒவ்வொரு நிகழ்வு-பணிகளுக்கும் ஒரு குழுவென 20குழுவைச் சேர்ந்த சுமார் 50பேர் இதற்கெனக் கடந்த ஒருமாதமாக உழைத்து வருகிறார்கள்..

தாங்கள் இவ்விழாவில் கலந்து கொண்டு தமிழ்வலைப்பதிவர் பயனுறவும் அதன்வழியே கணினித் தமிழ் வளரவும்முகம்தெரியாத முகநூலில் சிக்கிக் கிடக்கும் இன்றைய இளைஞர் வலைப்பக்கம் திரும்பவும் உதவ வேண்டும்!

வாசலில் நின்று வரவேற்கக் காத்திருக்கிறோம்.. வருக!
இணையத் தமிழால் இணைவோம்... வருக! வருக!!
தங்கள் வருகை எங்கள் உவகை!... வருக! வருக!! வருக!!! 
விழாக்குழுவின் சார்பில் அன்புடன் அழைக்கிறோம்....!
அன்பில் மகிழ்ந்துஆதரவால் நெகிழ்ந்து-
கூப்பிய கைகளுடன் தங்ளுக்காகக் காத்திருக்கிறோம்!

இவண்
நா.முத்துநிலவன்,
(ஒருங்கிணைப்பாளர்)

தங்கம்மூர்த்திஇரா.ஜெயலட்சுமிமு.கீதா.கஸ்தூரிரெங்கன்
பொன்.கருப்பையாகு..திருப்பதி.குருநாதசுந்தரம்வைகறை
மீரா.செல்வக் குமார்ராசி.பன்னீர்செல்வன்பா.ஸ்ரீமலையப்பன்
மகா.சுந்தர்ஆர்.நீலா.பாண்டியன்மைதிலிகா.மாலதி.ரேவதி
ஸ்டாலின் சரவணன்சு.மதியழகன்சு.இளங்கோஎஸ..கருப்பையா
தூயன்யு.கே.கார்த்திநாக.பாலாஜிசு.துரைக்குமரன்நண்பா.கார்த்திக்,
சோலச்சிசுரேஷ்மான்யாசிவா.மேகலைவன் 
விழாக்குழு உறுப்பினர்கள் 
கணினித் தமிழ்ச்சங்கம்புதுக்கோட்டை

செல்பேசி – 94431 93293
--------------------------------------------------

இவர்களுடன்  இணைந்து 
திண்டுக்கல் பொன்தனபாலன் அவர்கள்
விழாவுக்கு ஆற்றியிருக்கும்
தொழில்நுட்ப உதவி சொல்லில் அடங்காது.

வலைப்பக்கத்தை 
மெருகூட்டித் தந்த 
சென்னைப் பதிவர் 
திருமிகு மதுமதி அவர்கள்
விழாக்குழுவின் நன்றிக்குரியவர்
இவர்களோடு 
நமது மதிப்பிற்குரிய சிலரையும்
அனைத்துப் பதிவர்களுமாய்ச் சேர்ந்து
நமது விழாவில்
கௌரவிக்கத் திட்டமிட்டிருக்கிறோம்.

--------------------

விழாவுக்கான வலைப்பக்கம் –  http://bloggersmeet2015.blogspot.com
விழாத் தொடர்பான மின்னஞ்சல் – bloggersmeet2015@gmail.com


3 comments:

  1. அழைப்புக்கு நன்றி. விழா இனிதே நடக்க வாழ்த்து!

    ReplyDelete
  2. தங்களின் கணினித் தமிழ் வளர்ச்சிக்கான வலைப்பதிவர்களை ஒருங்கிணைக்கும் பெரும் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.அழைப்புக்கு மிக்க நன்றி!

    ReplyDelete
  3. தங்களின் கணினித் தமிழ் வளர்ச்சிக்கான வலைப்பதிவர்களை ஒருங்கிணைக்கும் பெரும் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.அழைப்புக்கு மிக்க நன்றி!

    ReplyDelete